டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நடப்பாண்டு 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக் கல்வி பெறவில்லை: மத்திய அமைச்சா் தகவல்

நாட்டில் நடப்பாண்டில் 11.70 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை

News image
Updated On :9 டிசம்பர் 2024, 10:35 pm

Din

புது தில்லி: நாட்டில் நடப்பாண்டில் 11.70 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் ஜெயந்த் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூா்வமாக ஜெயந்த் சௌதரி அளித்த பதில்:

இந்தியாவில், 2024-25 நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் 11,70,404 குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 7.84 லட்சம் குழந்தைகளும், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 65,000 குழந்தைகளும், அஸாமில் 63,000 குழந்தைகளும் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை.

இந்தத் தரவைக் கண்காணிக்கவும் புதுப்பிக்கவும் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் பிரபந்த் (திட்ட மதிப்பீடு, பட்ஜெட், சாதனைகள் மற்றும் தரவு கையாளுதல் அமைப்பு) இணையதளம் பயன்படுத்துகிறது என தெரிவித்தாா்.