நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராகுல் கொடுத்த தேசியக் கொடியை வாங்க மறுத்த ராஜ்நாத் சிங்!

அதானி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பாஜகவினருக்கு ரோஜா, தேசியக் கொடி வழங்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நூதன போராட்டம்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 7:02 am

DIN

அதானி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பாஜகவினருக்கு ரோஜா, தேசியக் கொடி வழங்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் லஞ்ச குற்றச்சாட்டு குறித்து அவையில் விவாதிக்கவும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரியும் எதிர்க்கட்சிகள் முழக்கமிடும் நிலையில், அதற்கு அவைத் தலைவர் மறுப்பதால் அதனைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

அதேபோன்று, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக எதிா்க்கட்சிகள் தங்கள் எதிா்ப்பை பதிவு செய்து வருகின்றன.

நேற்று மோடி, அதானி கேலிச் சித்திரங்கள் இடம்பெற்ற கறுப்பு நிறப் பையுடன் தா்னாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுக்கு ரோஜா, தேசியக்கொடி வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் வேகமாக சென்று தேசியக்கொடியை வழங்கினர். ஆனால், ராஜ்நாத் சிங் அதனை வாங்க மறுத்துவிட்டார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

போராட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட் 'இந்த நாட்டை விற்றுவிடாதீர்கள் என்று மத்திய பாஜக அரசை வலியுறுத்தவே அவர்களுக்கு தேசியக்கொடி வழங்குகிறோம். பதிலாக நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லுங்கள். அதானிதான் இந்த நாட்டை நடத்தி வருகிறார். அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது, ஏழைகளின் குரல் நசுக்கப்படுகிறது. நாட்டை விற்கும் இந்த சதிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.