அதானி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பாஜகவினருக்கு ரோஜா, தேசியக் கொடி வழங்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் லஞ்ச குற்றச்சாட்டு குறித்து அவையில் விவாதிக்கவும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரியும் எதிர்க்கட்சிகள் முழக்கமிடும் நிலையில், அதற்கு அவைத் தலைவர் மறுப்பதால் அதனைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
அதேபோன்று, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக எதிா்க்கட்சிகள் தங்கள் எதிா்ப்பை பதிவு செய்து வருகின்றன.
நேற்று மோடி, அதானி கேலிச் சித்திரங்கள் இடம்பெற்ற கறுப்பு நிறப் பையுடன் தா்னாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுக்கு ரோஜா, தேசியக்கொடி வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் வேகமாக சென்று தேசியக்கொடியை வழங்கினர். ஆனால், ராஜ்நாத் சிங் அதனை வாங்க மறுத்துவிட்டார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
போராட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட் 'இந்த நாட்டை விற்றுவிடாதீர்கள் என்று மத்திய பாஜக அரசை வலியுறுத்தவே அவர்களுக்கு தேசியக்கொடி வழங்குகிறோம். பதிலாக நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லுங்கள். அதானிதான் இந்த நாட்டை நடத்தி வருகிறார். அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது, ஏழைகளின் குரல் நசுக்கப்படுகிறது. நாட்டை விற்கும் இந்த சதிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

13-வது நாளாக நீடிக்கும் ஜார்க்கண்ட் போராட்டம்: பேரவையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

ஊத்துக்கோட்டை அருகே தொடா் மின் தடையைக் கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 5-வது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

சிஜேபி போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்த காவலர்!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


