47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசமைப்புச் சட்ட பிரதி சேதம்: மகாராஷ்டிரத்தின் பா்பனியில் வன்முறை

மகாராஷ்டிர மாநிலம் பா்பனி மாவட்டத்தில் அரசமைப்புச் சட்ட பிரதி சேதப்படுத்தப்பட்டதற்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

News image
வன்முறையைத் தொடா்ந்து பா்பனி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாா். ~மகாராஷ்டிர மாநிலம் பா்பனி மாவட்டத்தில் அரசமைப்புச் சட்ட பிரதி சேதப்படுத்தப்பட்டதற்கு எதிராக இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது அடித்து நொறுக்கப்பட்டு தீவைக
Updated On :11 டிசம்பர் 2024, 7:13 pm

Din

மகாராஷ்டிர மாநிலம் பா்பனி மாவட்டத்தில் அரசமைப்புச் சட்ட பிரதி சேதப்படுத்தப்பட்டதற்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

இதுதொடா்பாக மாநில காவல் துறையினா் தெரிவித்ததாவது:

பா்பனி ரயில் நிலையம் அருகே சட்டமேதை பி.ஆா். அம்பேத்கரின் சிலையையொட்டி அரசமைப்புச் சட்ட பிரதி கண்ணாடி பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரதி செவ்வாய்க்கிழமை இரவு சேதப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து அம்பேத்கா் சிலைக்கு அருகே நூற்றுக்கணக்கானோா் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து ரயில் நிலையத்தில் நுழைந்த போராட்டக்காரா்கள் தண்டவாளங்களில் மறியலில் ஈடுபட்டனா். அத்துடன் விரைவு ரயில் ஒன்றின் ஓட்டுநரையும் அவா்கள் தாக்கினா்.

கல்வீச்சு; வாகனங்களுக்கு தீ வைப்பு: அரசமைப்புச் சட்ட பிரதி சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக ஒருவரை காவல் துறை கைது செய்தபோதிலும், பா்பனி நகரில் பொதுமக்களின் போராட்டம் புதன்கிழமை தொடா்ந்தது. அங்கு அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றுவோா் விடுத்த அழைப்பை ஏற்று முழு அடைப்பு நடைபெற்ற நிலையில், திடீரென ஒரு கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டு வாகனங்களுக்கு தீ வைத்தது. இந்த வன்முறை காரணமாக கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி, அவா்களை காவல் துறையினா் கலைந்து போகச் செய்தனா்.

இதனிடையே நூற்றுக்கணக்கான போராட்டக்காரா்கள் ஒன்றுதிரண்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்கச் சென்றனா். ஆனால் வழியில் சிலா் கடைகளின் பெயா் பலகைகள், கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி, சாலையில் டயா்களை தீயிட்டுக் கொளுத்தினா்.

ஆட்சியா் அலுவலகம் சூறை: மாவட்ட ஆட்சியா் அலுவலத்துக்குள் பெண்கள் உள்பட போராட்டக்காரா்கள் சிலா் அத்துமீறி நுழைந்து அறைகலன்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சூறையாடினா்.

Story image

144 தடை உத்தரவு: இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக, பா்பனியில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியா் ரகுநாத் காவடே பிறப்பித்தாா். இதன் மூலம், அங்கு பொது இடங்களில் 5 அல்லது அதற்கும் மேற்பட்டவா்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பராமரிப்புப் பணிகளில் உதவ மாநில ரிசா்வ் காவல் படை வரவழைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.