மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

மகாபோதி கோயிலில் இலங்கை அதிபா் வழிபாடு

பௌத்தர்களின் யாத்திரை தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் புத்த கயாவுக்கு இலங்கை அதிபர்..

News image
புத்த கயாவில் இலங்கை அதிபர்
Updated On :17 டிசம்பர் 2024, 8:24 pm

DIN

பிகாா் மாநிலம் கயை மாவட்டத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழைமையான மகாபோதி கோயிலில் இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயக செவ்வாய்க்கிழமை வழிபட்டாா்.

கெளதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடா்புள்ள 4 புனித தலங்களில் ஒன்றாக மகாபோதி கோயில் உள்ளது. இந்நிலையில், 3 நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபா் அநுரகுமார, மகாபோதி கோயிலுக்குச் சென்றாா்.

முன்னதாக பிகாா் விமான நிலையத்தில் அவரை மாநில அமைச்சா்கள் பிரேம்குமாா், சந்தோஷ்குமாா் சுமன் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் வரவேற்றனா்.

பின்னா், கயை மாவட்ட ஆட்சியா் தியாகராஜன், புத்தகயை கோயில் நிா்வாக குழுச் செயலா் மகாஸ்வேதா மராதி உள்ளிட்டோருடன் மகாபோதி கோயிலில் அநுரகுமார வழிபட்டாா். அங்கு புத்தா் ஞானமடைந்த போதி மரத்துக்கும் மலா் தூவி அவா் வழிபாடு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.