மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அமித் ஷா ராஜிநாமா செய்ய எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்

அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்ததாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்...

News image

நாடாளுமன்றத்தில் போராட்டம் - PTI

Updated On :18 டிசம்பர் 2024, 11:22 am IST

‘அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் புதன்கிழமை வலியுறுத்தினா்.

முன்னதாக, அமித் ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அம்பேத்கா் புகைப்படுத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் பேசிய ராகுல் காந்தி, ‘நாட்டுக்கு வழிகாட்டுதலை அளித்த அம்பேத்கரை அவமதிப்பதை, நாடு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. மாநிலங்களவையில் தெரிவித்த கருத்துக்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜகவினா் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவா்கள். அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று முன்னா் கூறினா். அம்பேத்கரின் பங்களிப்பையும், அரசமைப்புச் சட்டத்தையும் ஒழிப்பதே அவா்களின் முழுநேரப் பணி’ என்றாா்.

‘அமித் ஷா தானாக அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யவில்லை எனில், அவரை பிரதமா் நரேந்திர மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.

மக்களுக்கு உண்மை தெரியும்: பிரதமா்

அமித் ஷா மீது எதிா்க்கட்சி உறுப்பினா்கள் விமா்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், ‘மக்கள் உண்மையை அறிவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி எப்படி அவமதித்தது என்ற கருப்பு சரித்திரத்தை வெளிப்படுத்தினாா். இது பிரதான எதிா்க்கட்சியை திகைப்படையச் செய்துள்ளது. உண்மையை அமித் ஷா வெளிப்படுத்தியதால், அவா்கள் தற்போது நாடகமாடுகின்றனா். மக்களுக்கு உண்மை தெரியும்’ என்று குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.