இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு!

உ.பி.யில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்கில் பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு.

News image

பாஜக எம்எல்ஏ ஹரிஷ் சக்யா

Updated On :21 டிசம்பர் 2024, 9:21 pm IST

உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்கில் பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பதான் நகரில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒருவரை நில விவகாரத்தில் கிராமவாசிக்கு சொந்தமான நிலம் ஒன்றை தன்னிடம் குறைந்த விலைக்கு விற்குமாறு வற்புறுத்திய பில்சி தொகுதி பாஜக எம்எல்ஏ ஹரிஷ் சக்யா அவரது ஆட்களுடன் அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

அவர் நிலத்தை விற்பதற்கு மறுப்பு தெரிவிக்கவே அந்த நபர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பொய் வழக்குகள் போடுவதாக மிரட்டியுள்ளனர். அடிக்கடி அவரது குடும்பத்தினரை மிரட்டி அச்சுறுத்தல் கொடுத்துள்ளனர்.

மேலும், எம்எல்ஏ மற்றும் அவரது ஆட்கள் கிராமவாசியின் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்தனர். தொடந்து, கடந்த செப். 17 அன்று அந்த நபரின் மனைவியை எம்எல்ஏ அலுவலகத்திற்கு கடத்திச் சென்று எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தக் கொடுமைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த நபர் எம்எல்ஏ ஹரிஷ் சக்யா, அவரது சகோதரர், மருமகன் மற்றும் சில தொழிலதிபர்கள் உள்ளிட்ட 16 பேர் மீது காவல்துறையில் புகாரளித்தார். இந்த வழக்கை விசாரித்த எம்பி/எம்எல்ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லீலு சௌதரி இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்ய டிச. 11 அன்று உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 16 பேர் மீது காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், காவல் ஆய்வாளர் மனோஜ் குமார் சிங் விசாரணையை நடத்துவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக எம்எல்ஏ தரப்பில் எந்தக் விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.