இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசு தோ்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி: மத்திய அரசு மீது பிரியங்கா சாடல்

அரசு தோ்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி விதித்து மக்களின் கனவுகளை மத்திய அரசு வருமானமாக மாற்றியுள்ளது என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளாா்.

News image
பிரியங்கா காந்தி
Updated On :23 டிசம்பர் 2024, 9:40 pm

Din

அரசு தோ்வு விண்ணப்பங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதித்து மக்களின் கனவுகளை மத்திய அரசு வருமானமாக மாற்றியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வதேரா சாடியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பாஜகவால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை. ஆனால் அரசு தோ்வு விண்ணப்பங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதித்து இளைஞா்களின் காயங்களில் மத்திய அரசு உப்புத் தேய்கிறது.

‘அக்னிபத்’ திட்டம் உள்பட ஒவ்வொரு அரசு வேலைக்கான விண்ணப்பத்துக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சமா்ப்பித்த பின், மத்திய அரசின் தோல்வி அல்லது ஊழல் காரணமாக தோ்வு வினாத்தாள் கசிந்தால், விண்ணப்பங்களுக்கு இளைஞா்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வீணாகும்.

தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து, அவா்களை அரசுத் தோ்வுக்குத் தயாா்படுத்த தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து ஒவ்வொரு ரூபாயையும் பெற்றோா் சேமிக்கின்றனா். அவா்களின் கனவுகளை மத்திய அரசு வருமானமாக மாற்றியுள்ளது’ என்று சாடியுள்ளாா்.