கேரளத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மேடைக்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் பரதநாட்டியம் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஐபிக்கள் அமர்வதற்காக 15 அடி உயர மேடை போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் மேடைக்கு வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மேடையில் இருந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைப்பதற்கு முன்னதாக இந்த விபத்து நடந்துள்ளது.
வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை
விபத்தில் சிக்கிய எம்எல்ஏ உமா தாமஸ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் தலையில் எலும்பு முறிவு, ரத்த கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கோட்டயம் மற்றும் எர்ணகுளம் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் எம்எல்ஏவுக்கு சிகிச்சை அளிக்கும் குழுவுடன் இணைந்துள்ளனர்.
சுயநினைவை இழந்துள்ள உமா தாமஸுக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களுடன் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், தொழில்துறை அமைச்சர் ராஜீவ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், மேடையில் நிற்பதற்கு போதுமான இடம் ஒதுக்காததே உமா தாமஸ் கீழே விழுவதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டதாக கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோருக்கு எம்எல்ஏ ஆறுதல்

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளியின் காலைக் கடித்து குதறிய எலி!

அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் படுகாயம்

தென்னிந்தியாவில் முதல் முறையாக ஜிப்மரில் ரோபோடிக் உதவியுடன் நரம்பு அறுவை சிகிச்சை
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



