சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

பழங்குடியினப் பெண்களை மரத்தில் கட்டிவைத்து அடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு!

ஒடிசாவில் பழங்குடியினப் பெண்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த கும்பல்.

News image

மரத்தில் கட்டிவைக்கப்பட்டப் பெண்களை மீட்கவந்த காவல்துறையினர்.

Updated On :30 டிசம்பர் 2024, 8:45 am IST

ஒடிசாவில் மதமாற்றம் செய்ய வந்ததாகக் கூறி பழங்குடியினப் பெண்கள் இருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள காரிமுக்ரா கிராமத்தில் கடந்த வியாழனன்று (டிச. 26) இரு பழங்குடியினப் பெண்கள் கிறிஸ்துவ மதப் பிரசாரம் செய்ய வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் வந்த செய்தி கிராமத்திற்குள் பரவியதும் அங்குள்ள ஹிந்து மதத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று சம்பவ இடத்திற்கு வந்து அந்தப் பெண்களை மரத்தில் கட்டி வைத்தனர்.

அந்தப் பெண்களின் முகத்தில் கொடூரமாகத் தாக்கிய கும்பல் அவர்களை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் எழுப்புமாறு கூறினர். இந்தத் தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் அங்கு விரைந்து அந்தப் பெண்களை மீட்டனர்.

இரு பெண்களையும் காவல்துரையினர் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் மதமாற்றப் பிரசாரம் செய்ய வந்ததாக ஒப்புக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, உள்ளூர் மக்களாலும் பாதிக்கப்பட்ட பெண்களாலும் இரு வேறு வழக்குகள் அன்று பதிவு செய்யப்பட்டன. புகாரின்படி, ஒடிசாவின் மதச் சுதந்திரச் சட்டம் 1967-ன் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் அந்தப் பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அந்தப் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 15 பேர் மீது பட்டியலின வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்தக் கும்பல் பெண்களைத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

”பெண்களைத் தாக்கிய குற்றவாளிகள் யாரென்று விடியோ பதிவுகள் மூலம் கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், சட்டம- ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரிமுக்ரா கிராமத்தில் காவல்துறையினர் முகாமிட்டுள்ளனர்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.