முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பஞ்சாபில் விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம்! பேருந்து, ரயில் சேவை பாதிப்பு

பஞ்சாபில் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்...

News image

பஞ்சாபில் விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம்

Updated On :30 டிசம்பர் 2024, 12:44 pm IST

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாபில் விவசாயிகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள கனெளரி பகுதியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இங்கு ஜகஜீத் சிங் தலேவால்(70) என்ற விவசாயி, கடந்த நவம்பா் 26 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளாா்.

இன்று 35-வது நாளாக அவரது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜகஜீத் சிங் தலேவாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் விவசாயிகள் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி, பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலைகளில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ், பாட்டியாலா - சண்டீகர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டப் பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது. பஞ்சாபில் ஒரு ரயில்கூட இன்று இயக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.