வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய நிலையை தொடரும் என நிதியமைச்சர் நிர்மா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு நிதி அறிக்கை ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
படிக்க: வேட்டையன் அப்டேட்!
இந்த நிலையில் இன்றைய உறையில், வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. இறக்குமதி வரியிலும் எந்த மாற்றமும் இல்லை. அதேபோன்று நேரடி மற்றும் மறைமுக வரியிலும் எந்த மாற்றமும் இல்லை. பழைய வருமான வரி வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வளர்ச்சியின் பலன்களை ஏழை மக்கள் அடைய தொடங்கியுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.