ஷிம்லா: ஆற்றில் கார் விழுந்த விபத்தில் தம்பதி உள்பட மூவர் பலியாகியதாகவும் இருவர் காயமுற்றதாகவும் ஹிமாச்சல் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழை மாலை மஹோல் பகுதிக்கு அருகில், காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் கார் தவறி ஆற்றில் விழுந்தது.
காரில் இருந்த அபய் குமார், ஜித்தேஷ் அவரது மனைவி வன்ஷிகா ஆகியோர் இந்த விபத்தில் பலியாகினர்.
மற்ற இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை காயமுற்றவர்களை மீட்டது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியா? நடிகர் விஜய் பதில்
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.