4 வயது மகன், 2 வயது மகளுடன் தாய் தற்கொலை

குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்ததுக்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
4 வயது மகன், 2 வயது மகளுடன் தாய் தற்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் 28 வயதான தாய் மற்றும் இரு குழந்தைகள் தூக்கிட்டு இறந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய் இறப்பதற்கு முன்பு இரு குழந்தைகளையும் தூக்கிலிட்டு இருக்க வேண்டும் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.

பலோட் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹேம்லதா சாஹு. இவரது கணவர் கட்டடத் தொழிலாளி. 4 வயது  மகன் மற்றும் 2 வயது மகள் தம்பதிக்கு உள்ளனர். வெள்ளிக்கிழமை கணவர் பணிக்காக வெளியே சென்றுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத மாமியாரை மருத்துவமனையில் வைத்து கவனித்துக் கொள்ளும் மாமனார் வீட்டுக்கு திரும்பியபோது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டதைக் கவனித்துள்ளார்.

ஜன்னல் வழியாக பார்த்தபோது மருமகளும் குழந்தைகளும் வீட்டின் மேற்கூரையில் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அருகில் உள்ளவர்களின் உதவியுடன் வீட்டுக்குள் நுழைந்தனர்.

தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com