பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸூக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், 'பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் விரைவில் குணமடைய இந்திய மக்கள் வாழ்த்துகிறோம்' எனக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பக்கிங்காம் அரண்மனை கடந்த திங்கள் கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து மோடி இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய்!
மன்னருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருவதாகவும், விரைவில் அவர் குணமடைந்து மக்கள் பணியில் ஈடுபடுவார் எனவும் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

