நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ராமர் கோயில் விழாவில் ஒரு எளிய மனிதரையாவது பார்க்க முடிந்ததா? : ராகுல் கேள்வி

ராகுல் காந்தி ஆளும் பாஜக அரசு எளிய மக்களிடமிருந்து கொள்ளையடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

News image

சத்தீஸ்கரில் ராகுல் காந்தி - PTI

Updated On :12 பிப்ரவரி 2024, 12:04 pm IST

பாஜக ஆட்சியில் நாட்டின் மக்கள் வேலையின்மையையும் பணவீக்கத்தின் சீற்றத்தையும் எதிர்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கர் கோர்பா மாவட்டத்தில் பாரத ஜோடா யாத்திரையில் மக்களிடையே பேசிய ராகுல் காந்தி மக்களின் பைகளில் இருந்து பணம் திருடப்படுவதாகவும் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய வகுப்பினர், தலித் மற்றும் ஆதிவாதி ஆகியோர் 74 சதவிகித மக்கள் நாடு முழுவதும் உள்ள நிலையில் இவர்கள்ஒருவர் கூட இந்தியாவின் முதன்மை 200 நிறுவனங்களில் தலைவராகவோ நிர்வாகத்திலோ கூட ஏன் இல்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஸ்கரில் ராகுல் காந்தி

சத்தீஸ்கரில் ராகுல் காந்தி - PTI

ஹிந்து ராஜ்யம் என பாஜக பிரகடனப்படுத்துவதாகவும் ஆனால் 74 சதவிகித மக்கள்தொகை வறுமையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள், தட்டில் மணி அடிக்கவும் அலைபேசி காட்டவும் தூக்கில் தொங்கவுமே உள்ளனர் என அவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அயோத்தி கோயில் விழாவில் ஏழையோ, தொழிலாளியோ அல்லது சிறிய முதலாளியோ கண்ணில் தென்பட்டனரா? அதானி ஜி, அம்பானி ஜி, அமிதாப் பச்சான், ஐஸ்வர்யா ராய் பச்சான், மற்ற மிகப்பெரிய தொழிலதிபர்கள் ஆகியோர் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. அதானி, அம்பானி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெரிய அறிக்கைகள் கொடுத்தனர் எனவும் தெரிவித்தார்.

சீன பொருள்களை விற்று அவர்கள் லாபம் பார்க்கும்போது மக்கள் வேலையின்மையையும் பணவீக்க சீற்றத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதனை பொருளாதார அநீதி என ராகுல் குறிப்பிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.