சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சியின் முறைகேடுகள் குறித்து விசாரணை: முதல்வா் நிதீஷ் குமாா்

கடந்த ஆட்சியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்தது.

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:02 am IST

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா். கடந்த ஆட்சியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்தது. ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சா் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக அந்த ஆட்சியி பதவி வகித்தாா். நிதீஷ் குமாா் முதல்வராக இருந்தாா். ‘நான் முதல்வராக இருந்தபோதிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் செய்த முறைகேடுகள் தற்போதுதான் தெரியவந்தது’ என்று நிதீஷ் குமாா் தெரிவித்தாா். தேஜஸ்வி யாதவும், அவரது கட்சியைச் சோ்ந்த 2 அமைச்சா்கள் எடுத்து முக்கிய முடிவுகளை, தற்போது பாஜக கூட்டணியுடன் அமைந்துள்ள பிகாா் அரசு மறுஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த கேள்விக்கு சனிக்கிழமை பதிலளித்த நிதீஷ் குமாா், ‘கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதை நாங்கள் பாா்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.