மும்பை (மகாராஷ்டிரம்): மக்களவை முன்னாள் தலைவரும், மகாராஷ்டிரம் மாநில முன்னாள் முதல்வருமான மனோகர் ஜோஷி, மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் காலமானார்.
86 வயதான ஜோஷிக்கு கடந்த புதன்கிழமை (பிப். 21) திடீரென் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மும்பை ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.
ஜோஷி உடல் முழு அரசு மரியாதையுடன் தாதர் சிவாஜி பார்க் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராய்கட் மாவட்டம் நந்தவி கிராமத்தில் 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்த ஜோஷி, 1995 முதல் 1999 வரை மகாராஷ்டிரம் முதல்வராகவும், 2002 முதல் 2004 வரை மக்களவை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
2006 முதல் 2012 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், 1999 முதல் 2002 வரை கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.தணிகாசலம் காலமானாா்
சிலிண்டர் தட்டுப்பாடு: மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு!
எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!

முன்னாள் மத்திய அமைச்சர் கே.பி.உண்ணிகிருஷ்ணன் காலமானார்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


