ஜிமெயில் மூடப்படுவதாக சமூக ஊடங்களில் வேகமாகப் செய்திப் பரவி வரும் நிலையில், அதில் உண்மையில்லை என்று கூகுள் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஜிமெயில் மூடப்படுவதாக மட்டுமல்ல, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் முடங்குகிறது என்று தேதியோடு புரளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பொதுவாக பழைய சேவைகளை மற்றும் பயன்பாட்டில் இல்லாத சேவைகளைத்தான் கூகுள் முடக்கும். அதில்லாமல், அதனை புதுப்பொலிவுடன் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கும். ஆனால், உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஜிமெயில் மூடப்படவிருப்பதாக புரளி ஒன்று வேகமாக அதுவும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இது குறித்து கூகுள் விளக்கம் அளித்துள்ளது. ஜிமெயில் நிலைத்திருக்கும் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் ஜிமெயில் சேவையை நிறுத்த கூகுள் திட்டமிட்டிருப்பதாக இத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜிமெயில் லெட்டர்பேடில் இந்த தகவல் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இன்று பல சமூக ஊடகங்கள் வழியாக பயணித்து பலரின் அதிர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.
இது முதலில் டிக்டாக் செயலியிலிருந்துதான் பரவியதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
உலகம் முழுவதுமிருப்பவர்களை பல ஆண்டுகளாக ஒன்றிணைத்து வரும் ஜிமெயில் பயணம் விரைவில் நிறைவு பெறவிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஜிபெயில் அதிகாரப்பூர்வமாக மூடப்படுகிறது. அதன் சேவை அது முதல் இருக்காது என்றும் அந்த புகைப்பட புரளி தெரிவிக்கிறது.
இனி ஜிமெயில் மூலம் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியாது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
பரவி வரும் புகைப்படம்..

இது உண்மை என நம்பி பலரும் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து கவலையும் வருத்தமும் அதிருப்தியும் அதிர்ச்சியும் தெரிவித்து பதிவுகளை பகிர்ந்திருந்தனர். ஆயிரக்கணக்கானோரின் அதிர்ச்சியை இல்லாமல் ஆக்கும் வகையில் கூகுள் இது புரளி என்று பதிலளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாலத்தீவில் தட்டம்மை பரவல்: தடுப்பூசி மருந்து அனுப்பியது இந்தியா

சைதுலாஜாப்பில் கட்டடம் இடிந்த சம்பவம்: நீதிபதிக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகளை நீக்க உத்தரவு

17 ஆண்டுகளாக 27 ஆம் தேதிகளில் மட்டும் பிறக்கும் சிங்கக் குட்டிகள்: தில்லி உயிரியல் பூங்காவில் விநோதம்

இது தெரியுமா? இரவில் வரும் நிலா சில நேரம் பகலிலும் தெரிகிறதே, ஏன்?
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



