காசி பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக பார்க்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பிரதமரின் நாடாளுமன்றத் தொகுதியான வாராணசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கவும், பொதுக்கூட்டங்களில் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழக்ததில் பேசிய அவர்,
காசி தற்போது பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் எதிரொலி, உலகம் முழுவதும் ஒலிக்கிறது.
பல்கலைக்கழகத்தில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுடன் பிரதமர் உரையாடுகிறார்.