மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் மகனுக்கு திருமனம் நிகழ உள்ளதால் எனது குடும்ப உறுப்பினர்களுடன் குலதெய்வத்தைத் தரிசித்தேன். குடும்ப நிகழ்ச்சியை முடித்தபிறகு, வழக்கமான வேலைக்காக மத்தியப் பிரதேசத்திற்குத் திரும்புவோம் என்று அவர் கூறினார்.
முன்னதாக அவரின் எக்ஸ் பதிவில், குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார். நல்லெண்ணம், பாசம் மற்றும் சேவை மூலம் பொதுநலத்திற்காக அர்ப்பணிப்பு என்ற செய்தியுடன் சமுதாயத்திற்கு ஒரு புதிய திசையை வழங்கிய குரு ரவிதாஸின் பிறந்தநாளில் அவருக்கு நான் தலைவணங்குகிறேன் என்று அவர் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.