மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஜவுளித் துறையின் மதிப்பு அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி

கடந்த 10 ஆண்டுகளில் நூல், துணி மற்றும் ஆடை உற்பத்தியில் 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 9:08 am

DIN

ஜவுளித் துறையின் மதிப்பு சந்தையில் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய ஜவுளி வர்த்தக அமைச்சகம் சார்பில் தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பாரத் 2024 கண்காட்சியை பிரதமர் மோடி திறந்வைத்தார்.

இந்த கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள ஜவுளி துறையினர் தங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்தினர். 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 3000 கண்காட்சியாளர்கள் 40 ஆயிரம் பார்வையாளர்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டனர்.

அப்போது பிரதமர் மோடி பேசியது,

2014-ல் இந்திய ஜவுளி துறையின் மதிப்பு ரூ.7 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் தற்போது ரூ.12 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நூல், துணி மற்றும் ஆடை உற்பத்தியில் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜவுளித் துறையில் தரக் கட்டுப்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. உங்கள் அனைத்து முயற்சிகளிலும் எங்கள் அரசாங்கம் முழுமையாக ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.

பருத்தி, சணல் மற்றும் பட்டு உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.