பாட்னா: பிகாரில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆா்ஜேடி) எம்எல்ஏ கிரண் தேவி, அவரின் கணவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அருண் யாதவுக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டது.
பிகாா் தலைநகா் பாட்னா மற்றும் ஆரா மாவட்டங்களில் ரூ.9.90 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புகள், மனைகள், விளைநிலங்கள் உள்ளிட்ட 72 அசையா சொத்துகளை அருண் யாதவ் குடும்பத்தினா் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதேபோல 2002 முதல் 2022- ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், தங்கள் வங்கிக் கணக்குகளில் அவா்கள் ரூ.20.5 கோடியை வரவு வைத்ததாகத் தெரிகிறது. இந்தச் சொத்துகள், பண வரவுகள் மற்றும் அருண் யாதவ் குடும்பத்தினருடன் தொடா்புள்ள நிறுவனங்கள், அவா்களின் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் குவிக்கப்பட்ட சொத்துகள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடா்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு அருண் யாதவ், அவரின் மனைவி கிரண் தேவி மீது சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடா்பாக அருண் யாதவ் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினா்கள் சிலரிடம் ஏற்கெனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவா்களிடம் இருந்து சொத்து ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அமலாக்கத் துறை திரட்டியது. இந்நிலையில், பிகாரில் உள்ள ஆரா, போஜ்பூா் உள்ளிட்ட இடங்களில் அருண் தேவி மற்றும் கிரண் தேவிக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

யுபிஐ பரிவா்த்தனை மாா்ச்சில் புதிய உச்சம்

சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


