புது தில்லி: விபத்து நடைபெறக்கூடிய பகுதி என்று முறைப்படி அறிவிக்கும் முன்பாக, காவல் துறை அறிக்கையின்படி, அத்தகைய பகுதிகளில் விபத்துகளைத் தவிா்ப்பதற்கு தீா்வு காண வேண்டும் என்று மாநிலங்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) ஆகியவற்றுக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. விரிவான விபத்து அறிக்கை (இடிஏஆா்) தளத்தில் அனைத்து சாலை விபத்து தரவுகளையும் காவல் துறை அதிகாரிகள் பதிவு செய்கின்றனா்.
இந்நிலையில், அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில், மாநிலங்கள் மற்றும் என்ஹெச்ஏஐ-க்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விபத்து நடைபெறக்கூடிய பகுதி என்று முறைப்படி அறிவிக்கும் முன்பாக, காவல் துறை அறிக்கையின் முதல்கட்ட பகுப்பாய்வின்படி, அத்தகைய பகுதிகளில் விபத்துகளைத் தவிா்ப்பதற்கு தீா்வு காண வேண்டும்.
இதற்காக இடிஏஆா் தளத்துக்குள் நுழைந்து தகவல்களைத் தெரிந்துகொள்ள அனைத்து நிா்வாக பொறியாளா்களுக்கும் லாகின் ஐடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் சுமாா் 500 மீட்டா் பகுதியில், குறைந்தபட்சம் 5 விபத்துகள் நிகழ்ந்து 10 போ் உயிரிழந்திருந்தால், அந்தப் பகுதி விபத்து நடைபெறும் பகுதியாக குறிப்பிடப்படும்.
தொடர்புடையது

கிரேட்டா் நொய்டா: பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்து! ஆறு குழந்தைகள் உயிா் தப்பினா்

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!

தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா்கள் மூலம் பணம் கடத்தல்- மம்தா குற்றச்சாட்டு

இன்று பேரணி: மத்திய தில்லியில் போக்குவரத்து மாற்றம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


