சமாஜ்வாதியின் தலைமை கொறடா ராஜிநாமா!

சமாஜ்வாதி கட்சியின் தலைமை கொறடா மனோஜ் பாண்டே தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.
மனோஜ் பாண்டே
மனோஜ் பாண்டே
Updated on
1 min read

சமாஜ்வாதி கட்சியின் தலைமை கொறடா மனோஜ் பாண்டே தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.

மொத்தமுள்ள 10 இடங்களுக்கு பாஜக 8 வேட்பாளர்களையும், சமாஜ்வாதி 3 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின்படி பாஜக 7 இடங்களிலும், சமாஜ்வாதி 3 இடங்களிலும் வெற்றி பெறும் சூழல் உள்ளது.

இருப்பினும், சமாஜ்வாதியின் சில எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கட்சி தலைமையில் அச்சம் நிலவுகிறது.

மனோஜ் பாண்டே
உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவைத் தோ்தல்: பாஜக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைமைக் கொறடா மனோஜ் பாண்டே ராஜிநாமா செய்துள்ளார். இதனால், உபி மாநிலங்களவை தேர்தலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com