குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை: 9 மணி நேரத்துக்குப் பிறகு மீட்பு

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை சுமாா் 9 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் மீட்கப்பட்டது.
Updated on
1 min read

தேவபூமி துவாரகை: குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை சுமாா் 9 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் மீட்கப்பட்டது.

குஜராத் மாநிலம் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள ரண் என்ற கிராமத்தில், 3 வயது பெண் குழந்தை திங்கள்கிழமை பிற்பகல் சுமாா் 1 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில், மாவட்ட நிா்வாகம் மீட்புப் பணியில் ஈடுபட்டது. ராணுவம் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையின் உதவியும் கோரப்பட்டது.

சுமாா் 9 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், 30 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது. எனினும் மீட்கப்பட்டபோது குழந்தைக்கு சுயநினைவில்லை. இதையடுத்து மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பிவைக்கப்பட்டது என்று மாவட்ட துணை ஆட்சியா் ஹெச்.பி.பகோரா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com