பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை: 9 மணி நேரத்துக்குப் பிறகு மீட்பு

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை சுமாா் 9 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் மீட்கப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 10:10 pm

DIN

தேவபூமி துவாரகை: குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை சுமாா் 9 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் மீட்கப்பட்டது.

குஜராத் மாநிலம் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள ரண் என்ற கிராமத்தில், 3 வயது பெண் குழந்தை திங்கள்கிழமை பிற்பகல் சுமாா் 1 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில், மாவட்ட நிா்வாகம் மீட்புப் பணியில் ஈடுபட்டது. ராணுவம் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையின் உதவியும் கோரப்பட்டது.

சுமாா் 9 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், 30 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது. எனினும் மீட்கப்பட்டபோது குழந்தைக்கு சுயநினைவில்லை. இதையடுத்து மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பிவைக்கப்பட்டது என்று மாவட்ட துணை ஆட்சியா் ஹெச்.பி.பகோரா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.