மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நடிகர் யஷ்க்கு கட்அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

கர்நாடகத்தில் நடிகர் யஷ்க்கு கட்அவும் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் பலியானார்கள். 

News image
Updated On :8 ஜனவரி 2024, 5:59 am

கர்நாடகத்தில் நடிகர் யஷ்க்கு கட்அவும் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் பலியானார்கள். 

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் யஷ். இவரது பிறந்தாளை முன்னிட்டு ரசிகர்கள், 25 அடி உயர கட்அவுட்டை கடக் மாவட்டத்தில் நேற்றிரவு வைத்தனர்.

அப்போது மின்சாரம் தாக்கியதில் ஹனுமந்த, முரளி நடவினமணி, நவீன் ஆகியோர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் யஷ் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் யஷ் இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.