அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

முன்னாள் முதல்வர் இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை: ஏக்நாத் ஷிண்டே

கலவரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு சிவசேனை கட்சி நிதியுதவி அளித்துள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

News image

ஏக்நாத் ஷிண்டே

Updated On :14 ஜனவரி 2024, 10:32 am IST

பால்கர்: 2020 ஆம் ஆண்டு பால்கர் மாவட்டத்தில் நடைபெற்ற கும்பல் தாக்குதலில் பலியாகிய இரண்டு சாதுக்கள் உள்பட மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வழங்கினார்.

சாதுக்கள் கல்பவிருக்‌ஷா மஹாராஜ், கிரி மஹாராஜ் மற்றும் நிலேஷ் டெல்ஹாடே ஆகியோர் கரோனா ஊரடங்கு நேரத்தில் கட்சிஞ்சலே என்கிற கிராமத்தைக் கடக்க முயன்றனர். அவர்களைத் திருடர்கள் என எண்ணி கும்பல் தாக்கியது.

பெரியளவில் பேசுபொருளான இந்த வழக்கில், 500 பேர் கொண்ட கும்பலில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் காசோலையை அளித்த ஷிண்டே, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை எனக் குற்ற சாட்டியுள்ளார். இந்த நிதியுதவியை சிவசேனை கட்சி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.