திசை திருப்பப்படும் 9 விமானங்கள்

மோசமான வானிலை காரணமாக விமானங்கள் திசை திருப்பப்பட்டு வருகின்றன.
திசை திருப்பப்படும் 9 விமானங்கள்
Published on
Updated on
1 min read

தில்லியில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தரையிறக்க இயலாத சூழல் நிலவுகிறது. தில்லி வந்தடைய வேண்டிய 9 விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

அதிகாலை 4.30 முதல் 10.30 வரை தரையிறங்க வேண்டிய விமானங்கள் திருப்பப்பட்டுள்ளன.

பன்னாட்டு விமானம் ஒன்று முதலில் மும்பைக்குத் திருப்பப்பட்டது. அங்கும் தரையிறக்க முடியாததால் ஜெய்ப்பூருக்குத் திருப்பப்பட்டுள்ளது.

தில்லி மற்றும் வட இந்தியாவின் பகுதிகளில் கடுமையான பனி படலம் தென்படுகிறது. பனியால் தெளிவாக பார்க்க முடியாத சூழல் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com