தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராமர் கோயில் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட பின்பு அங்கு செல்வோம்: திக்விஜய் சிங்

அயோத்தியில் ராமர் கோயில் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட பின்பு அங்கு சென்று தரிசனம் செய்வேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார். 

News image

திக்விஜய் சிங் (கோப்புப்படம்)

Updated On :18 ஜனவரி 2024, 11:05 am

DIN

அயோத்தியில் ராமர் கோயில் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட பின்பு அங்கு சென்று தரிசனம் செய்வேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நிராகரித்தது.

இந்நிலையில் ராமர் கோயில் குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், “ராமர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ராமரை தரிசனம் செய்ய எங்களுக்கு அழைப்பு தேவையில்லை.

இந்து மத சாஸ்திரங்களின்படி, முழுமையாக கட்டிமுடிக்கப்படாத நிலையில் உள்ள கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடியாது. மேலும், பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இதனை ஒரு அரசியல் நிகழ்வாகவே மாற்றிவிட்டனர்.

அதனால் இந்த நிகழ்வில் எந்த சங்கராச்சாரியாரும் பங்கேற்கப் போவதில்லை. எந்த துறவியும் கலந்துகொள்ளப் போவதில்லை.

அயோத்தியில் ராமர் கோயில் முழுமையாக முடிக்கப்பட்ட பின்பு நாங்கள் அங்கு சென்று தரிசனம் மேற்கொள்வோம்.” என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.