ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு சிறைக் கைதி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜெய்ப்பூர் மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவர் ராஜஸ்தான் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறை அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தனர்.
அதையடுத்து உடனடியாக அந்த கைதி மீதும், மத்திய சிறையின் இரண்டு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் ஜவஹர் சிங் கூறினார்.
சிறைக்குள் கைபேசிகள் கடத்திச் செல்லப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருவதை தடுக்காத காரணத்தால் ஜெய்ப்பூர் மத்திய சிறையின் அதிகாரிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறைக்குள் கைபேசிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அனைத்து சிறைச்சாலைகளிலும் விரைவில் சோதனை நடத்தப்படும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது என்று அமைச்சர் ஜவஹர் சிங் உறுதியளித்தார்.
முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் ஆவார். புதன்கிழமை கைபேசியில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட கைதி, முதல்வரை கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையும் படிக்க | அசாமில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுகிறது: ராகுல்!
அதனையடுத்து அழைப்பு வந்த எண்ணை ஆராய்ந்தபோது அது ஜெய்ப்பூர் மத்திய சிறையில் இருந்து வந்தது என்று கண்டறியப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றத்துக்கான 'விசில்'

வரலாறு படைத்தது தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி!
வரலாறு படைத்தது தவெக! தனிப்பெரும் கட்சியாக வெற்றி!
அன்று ஆந்திரத்தில் என்டிஆர்; இன்று தமிழகத்தில் விஜய்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


