மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ராஜஸ்தான் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறைக் கைதி!

ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு சிறைக் கைதி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

News image

பஜன்லால் சர்மா (கோப்புப்படம்)

Updated On :18 ஜனவரி 2024, 3:18 pm IST

ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு சிறைக் கைதி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஜெய்ப்பூர் மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவர் ராஜஸ்தான் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறை அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தனர்.

அதையடுத்து உடனடியாக அந்த கைதி மீதும், மத்திய சிறையின் இரண்டு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் ஜவஹர் சிங் கூறினார்.

சிறைக்குள் கைபேசிகள் கடத்திச் செல்லப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருவதை தடுக்காத காரணத்தால் ஜெய்ப்பூர் மத்திய சிறையின் அதிகாரிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைக்குள் கைபேசிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அனைத்து சிறைச்சாலைகளிலும் விரைவில் சோதனை நடத்தப்படும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது என்று அமைச்சர் ஜவஹர் சிங் உறுதியளித்தார்.

முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் ஆவார். புதன்கிழமை கைபேசியில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட கைதி, முதல்வரை கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

அதனையடுத்து அழைப்பு வந்த எண்ணை ஆராய்ந்தபோது அது ஜெய்ப்பூர் மத்திய சிறையில் இருந்து வந்தது என்று கண்டறியப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.