கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம்!

சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு.

News image
ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம்
Updated On :1 ஜூலை 2024, 5:33 am

DIN

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ், திமுக, திரிணமூல், சமாஜவாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நீட் முறைகேடு உள்ளிட்டவை குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் முழுவதும் நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இன்று மீண்டும் நீட் உள்ளிட்ட பிரச்னைகளை இரு அவைகளிலும் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.