தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இனி அரபு அமீரகத்திலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்!

நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கெனவே யுபிஐ பயன்பாட்டில் உள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஜூலை 2024, 7:40 am

DIN

மத்திய கிழக்கு நாடுகளில் யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

உலகம் முழுவதும் யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு வேகமாக செய்து வருகின்றது.

இந்நிலையில், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக நெட்வொர்க் இண்டர்நேஷனல் என்ற வர்த்தக நிறுவனத்துடன் என்பிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்போது இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்பவர்கள் அல்லது அங்கு வசிக்கும் இந்தியர்கள், யுபிஐ செயலிகள் மூலம் ’க்யூ-ஆர் கோடை’ ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தாண்டும் மட்டும் 98 லட்சம் பேருக்கு மேல் அந்த நாடுகளுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், அமீரகத்துக்கு மட்டும் 53 லட்சம் இந்தியர்கள் பயணிக்கவுள்ளனர்.

இந்நிலையில், யுபிஐ செயலிகளை உலகளவில் ஊக்குவிக்கும் பணிகளை மத்திய அரசுடன் இணைந்து இந்திய ரிசர்வ் வங்கியும், என்பிசிஐயும் செய்து வருகின்றன.

ஏற்கெனவே நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ், பூடான் மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் யுபிஐ அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர்.

என்பிசிஐ தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் யுபிஐ செயலிகள் மூலம் 1,390 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் 49 சதவிகிதம் அதிகரித்து கொண்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் மட்டும் யுபிஐ செயலிகள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 46.3 கோடி பரிவர்த்தனைகளில் ரூ. 66,903 கோடி மதிப்பிலான தொகை பகிரப்பட்டு வருகின்றது.

யுபிஐ பணப்பரிவர்த்தனை அதிகரித்து கொண்டிருப்பதன் காரணமாக யுபிஐயுடன் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைக்கும் பணிகள் வெளிநாடுகளிலும் தொடங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.