பிபவ் குமாரின் நீதிமன்றக் காவல் ஜூலை 16 வரை நீட்டிப்பு

ஸ்வாதி மாலிவால் வழக்கில் பிபவ் குமாரின் காவல் நீட்டிப்பு
பிபவ் குமார்(கோப்புப் படம்.)
பிபவ் குமார்(கோப்புப் படம்.)
Published on
Updated on
1 min read

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் கைதான முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்வாதி மாலிவால் எம்.பி. மே 13-ஆம் தேதி முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்திற்கு சென்றபோது அவரை பிபவ் குமாா் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிபவ் குமாா், தில்லி பெருநகா் மாஜிஸ்திரேட் கௌரவ் கோயல் முன் சனிக்கிழமை விடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா்.

இதையடுத்து, அவரது காவலை ஜூலை 16 வரை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது. முன்னதாக, இந்த வழக்கில் கடந்த மே 18-ஆம் தேதி குமாா் கைது செய்யப்பட்டாா்.

மே 16-ஆம் தேதி குமாருக்கு எதிராக பல்வேறு இந்திய தண்டனைச் சட்ட விதிகளின் கீழ் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது.

இதில் குற்ற அச்சுறுத்தல், தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம் போன்ற நோக்கத்துடன் ஒரு பெண்ணின் ஆடையை அவிழ்த்தல் மற்றும் குற்றமற்ற கொலை செய்ய முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com