காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

நாடாளுமன்றத்தில் அசாம் மக்களின் வீரர்களாக நிற்போம்: ராகுல் காந்தி

அசாம் மக்களுக்குத் துணைநிற்போம், நாடாளுமன்றத்தில் அசாம் மக்களின் வீரர்களாக குரல்கொடுப்போம் என்றார் ராகுல் காந்தி

Published On :8 ஜூலை 2024, 3:48 pm IST

சில்சார்: அசாம் மக்களுக்காக துணைநிற்போம், நாடாளுமன்றத்தில் அவர்களின் வீரர்களாக நின்று குரல்கொடுப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசையும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

அசாம் மாநிலம் சாசர் மாவட்டத்தில அமைந்துள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை இன்று ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசினார். அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

"நான் அசாம் மக்களுடன் துணை நிற்கிறேன், நான் நாடாளுமன்றத்தில் அவர்களின் ராணுவ வீரராக நின்று குரல்கொடுப்பேன். மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் விரைவாக வழங்குமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று ராகுல் தன்னுடைய 'எக்ஸ்' வலைத்தளத்தில் ஃபுலெர்டலில் உள்ள வெள்ள நிவாரண முகாமை பார்வையிட்ட பிறகு பதிவிட்டுள்ளார்.

அசாம் மாநிலத்துக்கு 'விரிவான மற்றும் கருணையுள்ளத்தோடு நிவாரணம வழங்கவும், குறுகிய காலத்தில் மறுவாழ்வு மற்றும் இழப்பீடு அளிப்பதோடு, ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்தையும் செய்ய வடகிழக்கு நீர் மேலாண்மை ஆணையம்' தேவை என்றும் ராகுல் கூறியுள்ளார்.

தில்லியில் இருந்து அசாமின் சில்சாருக்கு இன்று காலை விமானம் மூலம் வந்தடைந்த ராகுல், அங்கிருந்து வெள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

பிறகு, மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்துக்குப் புறப்பட்டார். அங்குள்ள நிவாரண முகாம்களைப் பாா்வையிட்ட பின்னா், மீண்டும் சில்சாருக்கு வந்து, அங்கிருந்து இம்பாலுக்கு விமானத்தில் பயணிக்கவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.