குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நாடாளுமன்றத்தில் அசாம் மக்களின் வீரர்களாக நிற்போம்: ராகுல் காந்தி

அசாம் மக்களுக்குத் துணைநிற்போம், நாடாளுமன்றத்தில் அசாம் மக்களின் வீரர்களாக குரல்கொடுப்போம் என்றார் ராகுல் காந்தி

News image
Updated On :8 ஜூலை 2024, 3:48 pm IST

சில்சார்: அசாம் மக்களுக்காக துணைநிற்போம், நாடாளுமன்றத்தில் அவர்களின் வீரர்களாக நின்று குரல்கொடுப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசையும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

அசாம் மாநிலம் சாசர் மாவட்டத்தில அமைந்துள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை இன்று ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசினார். அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

"நான் அசாம் மக்களுடன் துணை நிற்கிறேன், நான் நாடாளுமன்றத்தில் அவர்களின் ராணுவ வீரராக நின்று குரல்கொடுப்பேன். மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் விரைவாக வழங்குமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று ராகுல் தன்னுடைய 'எக்ஸ்' வலைத்தளத்தில் ஃபுலெர்டலில் உள்ள வெள்ள நிவாரண முகாமை பார்வையிட்ட பிறகு பதிவிட்டுள்ளார்.

அசாம் மாநிலத்துக்கு 'விரிவான மற்றும் கருணையுள்ளத்தோடு நிவாரணம வழங்கவும், குறுகிய காலத்தில் மறுவாழ்வு மற்றும் இழப்பீடு அளிப்பதோடு, ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்தையும் செய்ய வடகிழக்கு நீர் மேலாண்மை ஆணையம்' தேவை என்றும் ராகுல் கூறியுள்ளார்.

தில்லியில் இருந்து அசாமின் சில்சாருக்கு இன்று காலை விமானம் மூலம் வந்தடைந்த ராகுல், அங்கிருந்து வெள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

பிறகு, மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்துக்குப் புறப்பட்டார். அங்குள்ள நிவாரண முகாம்களைப் பாா்வையிட்ட பின்னா், மீண்டும் சில்சாருக்கு வந்து, அங்கிருந்து இம்பாலுக்கு விமானத்தில் பயணிக்கவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.