அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

விராட் கோலி நடத்தும் மதுக்கூடம் மீது வழக்குப்பதிவு!

அனுமதிக்கபட்ட நேரத்தை மீறி மதுபானக் கூடத்தை நடத்தியதால் பெங்களூரு காவல்துறையினர் நடவடிக்கை.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜூலை 2024, 1:21 pm IST

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மதுபானக் கூடம் மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மதுபானக் கூடங்களை திறந்து வைத்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து விராட் கோலியின் மதுபானக் கூடம் உள்பட 4 மதுபானக் கூடங்கள் மீது சனிக்கிழமை நள்ளிரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விராட் கோலிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்8 கம்யூன் என்ற மதுபானக் கூடம். இந்த நிறுவனத்துக்கு தில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூரு எம்ஜி சாலையில் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே ஒன்8 கம்யூன் மதுபானக் கூடத்தின் கிளை உள்ளது. மேலும், பல நிறுவனங்களின் மதுபானக் கூடங்களும் இந்த சாலையில் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு எம்ஜி சாலையில் உள்ள மதுபானக் கூடங்களில் அதிக சப்தத்துடன் மக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக இசைகள் இசைக்கப்படுவதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து, சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், ஒன்8 கம்யூன் உள்பட 4 மதுபானக் கூடங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட நேரமான அதிகாலை 1 மணிக்கு மேல் மதுபானக் கூடங்களை திறந்து வைத்திருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.