அதிகார துஷ்பிரயோகம் செய்த உதவி ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்தியத் தரவரிசையில், 821 ஆவது இடத்தைப் பெற்ற பூஜா கேத்கர், புணேவில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பூஜா, தான் பயன்படுத்தி வந்த `ஆடி’ காரில் `மகாராஷ்டிர அரசு’ என்று குறிப்பிட்டதுடன், சைரன் விளக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தன்னுடைய சொந்த காருக்கு பேன்சி பதிவெண்ணும் அளிக்குமாறு அதிகாரத் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
மேலும், ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரியான பூஜாவின் தந்தையும், பூஜாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பூஜாவின் செயல்கள் குறித்து அறிந்த புனே மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் திவாஸ், மாநில தலைமைச் செயலாளருக்கு, பூஜாவின் செயல்கள் குறித்து கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து, பூஜா கேத்கர் வாஷிம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்: கொலீஜியம் புதிய முடிவு

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 ஊராட்சி செயலாளா்கள் பணியிட மாற்றம்

10 காவல் உதவி ஆணையா்கள், 7 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

