அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் பிரதிபா எம்.சிங், அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு பதிலளிக்க கேஜரிவால் தரப்புக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
முன்னதாக, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "கைது நடவடிக்கையிலிருந்து ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், கேஜரிவால் கைது செய்யப்பட்டதாகவும், அந்த நோட்டீஸுக்கு எதிரான மனு தேவையற்றது' என்று கூறினார்.
தில்லி கலால் கொள்கை தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அனுப்பிய 9-ஆவது நோட்டீûஸ எதிர்த்து தில்லி முதல்வரும் ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளருமான கேஜரிவால் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீதிபதி விவகாரத்தில் கேஜரிவால் நியாயமான அச்சத்தை எழுப்பினாா்: ஆம் ஆத்மி

மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து நீதிபதி விலகக் கோரிய மனு: கேஜரிவால் பிரமாணப்பத்திரம் தாக்கல்

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

மதுபான கொள்கை வழக்கு: தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


