பாரமுல்லாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.26 மணியளவில் லேசான நிலக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.26 மணியளவில் லேசான நிலக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
பாரமுல்லாவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.26 மணியளவில் நிலக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள், உயிர்ச்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

