திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பிகார் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி!

ரூபாலியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பீமா பாரதியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

News image

இடைத்தேர்தல் வெற்றி அறிவிப்புக்குப் பிறகு சங்கர் சிங்

Updated On :13 ஜூலை 2024, 1:08 pm

பிகார் மாநிலம் ரூபாலி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றார்.

ரூபாலியில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பீமா பாரதியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

பிகார் மாநிலம் ரூபாலி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பீமா பாரதி, ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு மாறியதால், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் பீமா பாரதி (3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்) போட்டியிட்டார். ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கலாதர் பிரசாத் மண்டல் களமிறங்கினார். இவர் சமீபத்தில் முதல்வர் நிதீஷ் குமார் முன்னிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தவர்.

ஜூலை 10ஆம் தேதி இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

காலை 8 மணிமுதல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட கலாதர் பிரசாத் மண்டல் 6வது சுற்றுவரை முன்னணியில் இருந்தார்.

பின்னர், யாரும் எதிர்பார்க்காத வகையில், பின்னடைவில் இருந்த சுயேட்சை வேட்பாளர் அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்றார். இறுதியில் 68,070 வாக்குகள் பெற்று சங்கர் சிங் வெற்றி பெற்றார்.

ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் கலாதர் பிரசாத்தை விட 8,246 வாக்குகள் கூடுதலாக அவர் பெற்றார். இத்தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பீமா பாரதி டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டார்.

இது தொடர்பாக பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் சக்தி யாதவ், தேர்தல் முடிவுகள் வியப்பளிக்கின்றன. ஓபிசி பிரிவைச் சேர்ந்த இரு வேட்பாளர்களும் தோல்வி அடைந்துள்ளனர். அவர்கள் பாஜக கொள்கைகளுக்காக பணியாற்றினர். பிற்படுத்தப்பட்ட மக்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.