கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சட்டவிரோத மலையேற்றம்: உச்சியில் சிக்கிய 27 வாகனங்கள்!

சட்டவிரோத மலையேற்றத்திற்கு வந்ததாக 27 வாகனங்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர்.

News image

மலை உச்சியில் சிக்கிய வாகனங்கள்

Updated On :13 ஜூலை 2024, 9:21 pm IST

இடுக்கி மாவட்டத்தின் நெடுங்கண்டம், புஷ்பகண்டம், நாலுமலை ஆகிய மலைப்பகுதிகளில் 27 சுற்றுலா வாகனங்களை மாநில காவல் துறையினர் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அங்கீகாரம் இல்லாத வகையில் சட்டவிரோத மலையேற்றத்திற்கு வந்ததாக 27 வாகனங்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து வந்த 40 பேர் கொண்ட குழுவினர், நான்குசக்கர வாகனங்களில் வந்துள்ளனர். சட்டவிரோத மலையேற்றம் செய்த அனைத்து வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து வாகனங்களை பறிமுதல் செய்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இடுக்கி மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிகளில், விபத்துகள் காரணமாக கோடை காலத்திலும் மலையேற்றம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நுழைந்ததால் மாநில காவல் துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று (ஜூலை 12) நண்பகல் மலையேற்றத்தைத் தொடங்கிய அவர்கள், பலத்த மழை பெய்ததால் திரும்பி செல்ல முடியாமல் மலையில் தவித்தனர். பின்னர், மலையில் வாகனங்களை விட்டு இறங்கி வந்து உள்ளூர் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் சட்டவிரோதமாக மலையேற்றத்திற்கு வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மலை உச்சியில் ஆபத்தான இடத்தில் சிக்கிய வாகனங்களை ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.