இடுக்கி மாவட்டத்தின் நெடுங்கண்டம், புஷ்பகண்டம், நாலுமலை ஆகிய மலைப்பகுதிகளில் 27 சுற்றுலா வாகனங்களை மாநில காவல் துறையினர் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அங்கீகாரம் இல்லாத வகையில் சட்டவிரோத மலையேற்றத்திற்கு வந்ததாக 27 வாகனங்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து வந்த 40 பேர் கொண்ட குழுவினர், நான்குசக்கர வாகனங்களில் வந்துள்ளனர். சட்டவிரோத மலையேற்றம் செய்த அனைத்து வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து வாகனங்களை பறிமுதல் செய்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இடுக்கி மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிகளில், விபத்துகள் காரணமாக கோடை காலத்திலும் மலையேற்றம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நுழைந்ததால் மாநில காவல் துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று (ஜூலை 12) நண்பகல் மலையேற்றத்தைத் தொடங்கிய அவர்கள், பலத்த மழை பெய்ததால் திரும்பி செல்ல முடியாமல் மலையில் தவித்தனர். பின்னர், மலையில் வாகனங்களை விட்டு இறங்கி வந்து உள்ளூர் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் சட்டவிரோதமாக மலையேற்றத்திற்கு வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மலை உச்சியில் ஆபத்தான இடத்தில் சிக்கிய வாகனங்களை ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு! 3 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

40 வயது பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 பேர் கைது!

ஸ்ரீபெரும்புதூரில் 60 பைக்குகள் திருட்டு: காவலா் உள்பட மூவா் கைது

வெள்ளியங்கிரி மலையேற்றம்: இன்று முதல் தற்காலிக நிறுத்தம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



