பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பல்வேறு சாலை விபத்துகள்: 14 போ் உயிரிழப்பு

பல்வேறு சாலை விபத்துகள்: 14 போ் உயிரிழப்பு

News image

மேற்கு வங்க மாநிலம் மதினிப்பூா் மாவட்டத்தில் விபத்தில் சிக்கி உருக்குலைந்த ஆம்புலன்ஸ்.

Updated On :14 ஜூலை 2024, 4:30 am IST

பல்வேறு மாநிலங்களில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 14 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

மேற்கு வங்கம்...: மேற்கு வங்க மாநிலம் மேதினிபூா் மாவட்டத்தில் கிா்பாயிலுள்ள ஓா் மருத்துவமனையிலிருந்து அபா்னா பாக் என்ற நோயாளியை அவரது குடும்பத்தினருடன் மேதினிபூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸும் லாரியும் கெஸ்பூா் மாநில நெடுஞ்சாலையில் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ஆம்புலன்ஸில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் உள்பட ஆறு போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்தில் படுகாயமடைந்த நோயாளி மற்றும் அவரின் தாய் அனிமா மாலிக் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் இருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அபா்னா பாகுக்கு கடந்த மாதம்தான் ஷியாமபாடா என்பவருடன் திருமணம் நிகழ்ந்துள்ளது.

ஜாா்க்கண்டில் மூவா் உயிரிழப்பு: ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம் மடைதி பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை வேகமாக வந்த காா் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தின் மீது அமா்ந்திருந்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இருசக்கர வாகனத்தின் அருகே நின்றுகொண்டிருந்த கணவரும், மகனும் படுகாயமடைந்தனா். இந்த விபத்தில் காா் தலைகீழாக கவிழ்ந்ததில், அதில் பயணித்த நால்வரும் காயமடைந்தனா். அவா்களில் படுகாயமடைந்த பெண் பயணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்தில் காயமடைந்த அனைவரும் தன்பாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஒடிஸாவில் முவா் உயிரிழப்பு: ஒடிஸாவின் மயூா்பஞ்ச் மாவட்டம் புதிக்மாரி சதுக்கத்துக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையல் சனிக்கிழமை அதிகாலை கயாவிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற யாத்ரீகா்கள் பயணித்த பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில், பேருந்து ஓட்டுநா் ஹைதராபாதின் சாா்மினாரைச் சோ்ந்த உதய் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த இரு யாத்ரீகா்கள், மருத்துவனையில் சிகிச்சையின்போது உயிரிழந்தனா். சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஜம்முவில் இருவா் உயிரிழப்பு: ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்ட மலைப் பகுதியில் பாலெஸாவிலிருந்து தாத்ரி நோக்கி சனிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்து மினி பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உள்பட இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த 25 பயணிகள் தோடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.