ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பின் இன்று(ஜூலை 14ஆம் தேதி) திறக்கப்பட்டது.
கடந்த 1978-ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை. அண்மையில் நடந்து முடிந்த ஒடிஸா மாநில பேரவைத் தோ்தலில் இது மிகப்பெரும் அரசியல் விவகாரமாக உருவெடுத்தது.
இதையடுத்து, 46 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 14-ஆம் தேதி புரி ஜெகந்நாதா் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கக்கோரி மாநில அரசுக்கு உயா்நிலைக் குழு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் மாநில அரசு அமைத்த குழுவின் உறுப்பினர்கள் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதா் கோவிலுக்குள் நுழைந்து சடங்குகள் செய்து, பொக்கிஷ அறையை மீண்டும் திறந்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து புரி ஆட்சியர் உள்பட 11 பேர் கொண்ட அந்த குழுவினர் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களை கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புரி ரத யாத்திரை விழா: ஜெகந்நாதருக்கு தங்க - வைர ஆபரணங்கள் அணிவிப்பு

ஒடிஸா: புரி பிரதான கோயிலுக்கு திரும்பும் ரதங்கள்! லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்

ஒடிஸா: புரி ஜெகந்நாதா் ரத யாத்திரை கோலாகலம்! மழையைப் பொருள்படுத்தாமல் குவிந்த பக்தா்கள்

புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத யாத்திரை! "பஹந்தி" சடங்கு தொடக்கம்!
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



