அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புச் சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புச் சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.

News image
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு(கோப்புப்படம்)
Updated On :22 ஜூலை 2024, 3:57 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புச் சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புச் சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் திங்கள்கிழமை அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அதிகாரிகள் அளித்த தகவலின்படி, ரஜோரி மாவட்டத்தில் உள்ள குந்தா பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடியில் அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக, ஜம்மு பகுதியில் கதுவாவில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், தோடா மற்றும் உதம்பூரில் என்கவுன்டர் உள்ளிட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

முன்னதாக வியாழக்கிழமை, ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும் வியாழக்கிழமை தோடா மாவட்டத்தில் உள்ள கஸ்திகர் பகுதியில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.