படித்து முடித்து 51% இந்தியர்கள் மட்டுமே வலைவாய்ப்பைப் பெறுவதாக பொருளாதார ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
அதாவது படித்த பட்டதாரிகளில் இருவரில் ஒருவர், வேலைவாய்ப்பைப் பெறுவதில்லை. நவீன பொருளாதாரத்துக்கேற்ப போதிய திறன் மேம்பாட்டை அடையாததே இதற்கு காரணம் எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மக்கள்தொகையில் 65% மக்கள் 35 வயதுக்குட்பட்டவர்களாக உள்ள நிலையில், 51.25% பட்டதாரிகள் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெறுவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகத்தின் என்.எஸ்.எஸ்.ஓ. எனும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் அளித்த, 2011-12ல் இந்தியாவில் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிலை குறித்த அறிக்கையில், 15-59 வயதுடையவர்களில், சுமார் 2.2 சதவீதம் பேர் முறையான தொழிற்பயிற்சி பெற்றதாகவும், 8.6 சதவீதம் பேர் முறைசாரா தொழிற்பயிற்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் 2023 - 2024ஆம் ஆண்டு அறிக்கையில் இவை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
எனினும் 34% ஆக இருந்த இந்த விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்து தற்போது 51.25%ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு, நாட்டில் திறன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சியில் உள்ள சவால்களையும் கணக்கிடுகிறது.
அதாவது, திறன் மேம்பாடு பற்றிய பொதுக்கருத்து, கல்வியை முழுமையாக முடிக்காத மாணவர்களுக்கான மாற்றுவழி, மத்திய அரசின் மிதமிஞ்சிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நிகழ்ச்சிகள், பலவகைத் தரத்தில் சான்றிதழ் வழங்குவதால் வேலை வழங்குபவர்களிடையே ஏற்படும் குழப்பம், பயிற்சியற்ற ஆசிரியர்கள், தேவைக்கும் வழங்குவதற்கும் இடையேயான பொருந்தாத்தன்மை, திறன் மற்றும் உயர்கல்வி/ தொழிற்பயிற்சி நிகழ்ச்சிகளுக்கு இடையிலான வரையறை உள்ளிட்டவை குறித்தும் கணக்கிடப்பட்டுள்ளது.
திறன் மேம்பாட்டு பாடத்திட்டத்தில் போதாமை, பெண் ஊழியர்கள் பற்றாக்குறை, குறைந்த உற்பத்தி மற்றும் சிறப்பு திறன்கள் தேவைப்படாத ஒழுங்கமைக்கப்படாத துறையின் வேலைவாய்ப்புகள், புத்தாக்கத் தொழில்களுக்காக நிதி பற்றாக்குறை போன்றவற்றில் உள்ள சவால்கள் குறித்தும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக அறிக்கை விவரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு, தனியாா் ஐடிஐகளில் மாணவா் நேரடி சோ்க்கை

கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்காக தொடங்கியுள்ள அரசு ஐடிஐயில் நேரடி சோ்க்கை
நீட் தோ்வை தமிழ்நாடு அரசு எதிா்க்கிறது: முதல்வா் விஜய் பேச்சு

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




