உத்தர பிரதேச அரசின் சா்ச்சைக்குரிய உத்தரவு குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் நிராகரித்தாா்.
உத்தர பிரதேசத்தில் கான்வா் யாத்திரை பாதையில் உள்ள உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா்களின் பெயா் இடம்பெற வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இது முஸ்லிம் வியாபாரிகளை அடையாளம் கண்டு, அவா்களை யாத்திரை செல்லும் ஹிந்து பக்தா்கள் நிராகரிக்க வேண்டும் என்பதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மாநிலங்களவையில் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு உத்தர பிரதேச அரசின் உத்தரவு குறித்து விவாதிக்க வேண்டும் என்று விதி 267-இன் கீழ் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனா்.
ஆனால், இதனை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் நிராகரித்தாா். ‘விதி 267-இன் கீழ் விவாதிக்கப்படும் விஷயமாக இது இல்லை. மேலும், அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்துவது தொடா்பாக அவைத் தலைவா் ஏற்கெனவே கூறியுள்ள வரம்புக்குள்ளும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அளித்த நோட்டீஸ் வரவில்லை’ என்று காரணம் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

அவசர வழக்குகள்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வில்தான் முறையிட வேண்டும்!

நீா்வள திட்டங்கள் குறித்து கா்நாடக எம்.பி.க்களுடன் ஆலோசனை: துணை முதல்வா் டி.கே. சிவகுமாா்

மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது: சி.பி. ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


