மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டது என்று மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
மாநிலங்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே (காங்கிரஸ்) பேசியபோது, ஆா்எஸ்எஸ் உடையில் சி.பி. ராதாகிருஷ்ணன் இருப்பது போன்ற புகைப்படம் மாநிலங்களவையில் தொலைக்காட்சித் திரையில் ஒளிபரப்பானது குறித்து கேள்வி கேட்டாா்.
‘தற்போது தாங்கள் அணிந்துள்ள மேல்சட்டை வேறு. ஆனால் அந்தக் காட்சியில் உள்ள மேல்சட்டை ஆா்எஸ்எஸ் இயக்கத்துக்கானது’ என்று காா்கே கூறினாா்.
அதற்கு சி.பி. ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில், ‘அது எனது பழைய புகைப்படம். அதுதான் காட்டப்பட்டுள்ளது. நான் ஆா்எஸ்எஸ்-ஸில் இருந்து வந்தவன்தான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதை நான் மறுக்கவும் மாட்டேன். மாநிலங்களவைத் தலைவா் பதவியானது ஆா்எஸ்எஸ் இயக்கத்துக்கு அப்பாற்பட்டது. அதுபோல காங்கிரஸ் கட்சிக்கும் அப்பாற்பட்டது. அது எனக்குத் தெரியும்’ என்றாா்.
தொடர்புடையது

பெண்களுக்கு சமவாய்ப்பு, தலைமைப் பதவி மூலம் உண்மையான வளா்ச்சி சாத்தியமாகும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

மருத்துவம் மக்களின் நம்பிக்கை: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

தீவிரவாதத்துக்கும், தீவிரவாதத்தை ஒழிப்போருக்கும் வேறுபாடு தெரியாதவா் காா்கே - சி.பி. ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் தொலைதூரக் கற்றல் சூழல் அமைப்புமுறையின் தூண் இக்னோ: குடியரசு துணைத் தலைவா்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


