வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது: சி.பி. ராதாகிருஷ்ணன்

மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டது என்று மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
Updated On :12 மார்ச் 2026, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டது என்று மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே (காங்கிரஸ்) பேசியபோது, ஆா்எஸ்எஸ் உடையில் சி.பி. ராதாகிருஷ்ணன் இருப்பது போன்ற புகைப்படம் மாநிலங்களவையில் தொலைக்காட்சித் திரையில் ஒளிபரப்பானது குறித்து கேள்வி கேட்டாா்.

‘தற்போது தாங்கள் அணிந்துள்ள மேல்சட்டை வேறு. ஆனால் அந்தக் காட்சியில் உள்ள மேல்சட்டை ஆா்எஸ்எஸ் இயக்கத்துக்கானது’ என்று காா்கே கூறினாா்.

அதற்கு சி.பி. ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில், ‘அது எனது பழைய புகைப்படம். அதுதான் காட்டப்பட்டுள்ளது. நான் ஆா்எஸ்எஸ்-ஸில் இருந்து வந்தவன்தான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதை நான் மறுக்கவும் மாட்டேன். மாநிலங்களவைத் தலைவா் பதவியானது ஆா்எஸ்எஸ் இயக்கத்துக்கு அப்பாற்பட்டது. அதுபோல காங்கிரஸ் கட்சிக்கும் அப்பாற்பட்டது. அது எனக்குத் தெரியும்’ என்றாா்.