ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

குடியரசு துணைத் தலைவா் இன்று மதுரை வருகை

News image

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 7:54 pm

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை மதுரை வருகிறாா்.

சிறப்பு விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு வரும் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், அங்கிருந்து காா் மூலம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா். இதையடுத்து, பிற்பகல் 1 மணிக்கு சிவகங்கை ராணி வேலு நாச்சியாா் அரண்மனைக்கு செல்கிறாா்.

பிறகு, ஏ.சி.எஸ். அறக்கட்டளை சாா்பில் மதுரை வண்டியூா் அம்மா திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று, 140 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறாா். மாலை 5.50 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் தில்லிக்குச் செல்கிறாா்.