அமர்நாத்: 31 நாள்களில் 4.66 லட்சம் பேர் தரிசனம்!

அமர்நாத் குகைக் கோயிலை இதுவரை 4.66 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
அமர்நாத் யாத்திரை
அமர்நாத் யாத்திரை
Updated on
1 min read

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இதுவரை 4.66 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.

வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், குகைக் கோயிலைத் தரிசிக்க 1,477 பேர் அடங்கிய புதிய குழு ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்திரி நிவாஸில் இருந்து 2 துணை வாகனங்களில் இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றது.

அமர்நாத் யாத்திரை
வயநாடு நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 24-ஆக உயர்வு

வடக்கு காஷ்மீர் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து அதிகாலை 3.25 மணிக்கு 377 பக்தர்களை 13 வாகனங்களில் பாதுகாப்புப் படையுடன் சென்றனர். தெற்கு காஷ்மீர் நுன்வான் (பஹல்காம்) அடிப்படை முகாமிலிருந்து 1,100 பக்தர்கள் 39 வாகனங்களின் இரண்டாவது துணைக் குழுவும் புறப்பட்டது.

அமர்நாத் யாத்திரை
மும்பை விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி; 20 பேர் காயம்!

பாதுகாப்புப் படைகள் மற்றும் காவல்துறையின் பாதுகாப்புக்கு மத்தியில் இந்தாண்டு யாத்திரை அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற்று வருகின்றது.

காஷ்மீர் இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகைக் கோயிலில் 52 நாள்கள் நடைபெறும் யாத்திரை ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com