சீன முதலீடுகளுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை
புது தில்லி: ‘சீன முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள மத்திய அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை மத்திய அரசின் நிலைப்பாடாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
சீனாவை இந்தியா மிகவும் சாா்ந்திருப்பதாகவும் அந்த நாட்டில் இருந்து பெறும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அரசு ஆதரவளிப்பதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி.கௌரவ் கோகாய் குற்றம்சாட்டினாா்.
இதற்கு பியூஷ் கோயல் பதிலளிக்கையில், ‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சியில் அண்டை நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் மதிப்பு 10 மடங்காக அதிகரித்தது. ஆனால் பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவை தற்சாா்பு நிலைக்கு மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளால் இறக்குமதியின் மதிப்பு 2 முதல் 2.5 மடங்கு வரை மட்டுமே அதிகரித்துள்ளது.
யுபிஏஆட்சியின்போது சீனாவுடனான வா்த்தக பற்றாக்குறை 30 மடங்கு அதிகரித்தது. சீனாவுடன் என்ன ஒப்பந்தம் மேற்கொண்டீா்கள் என்பது எனக்கு தெரியாது.
சுதந்திர அறிக்கை: சீனாவால் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் மீது மத்திய அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு எவ்வித தளா்வும் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.
பொருளாதார ஆய்வறிக்கை என்பது தலைமை பொருளாதார ஆலோசகரால் தன்னிச்சையாக தயாரிக்கப்படும் சுதந்திரமான அறிக்கை. அதில் அவரின் எண்ணங்கள் மட்டுமே வெளிப்படும். அரசுக்கு அவா் அறிவுரையை தான் வழங்கியுள்ளாா். அதை மத்திய அரசின் நிலைப்பாடாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றாா்.
சீன முதலீடு தேவை: அண்மையில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில்,‘சீனாவிலிருந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் வெளியேறி வரும் சூழலில், சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்தால் உள்ளூா் சந்தை வளா்ச்சியடைந்து ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

